Sunday, September 1, 2019

4. ChandALan Kootru

2.
இலகு முணர்  வற்றதொ  ருடலோ, அதனுள் 
நிலவுமுணர் வுற்றதொ  ருயிரோ, நீவிர் 
விலகென  விளம்பிய தேதென வுரைப்பீர் 
விலகுவதுணர் வுடை யதுவோ? இலதோ?


3.
ஆற்று நீரினும் சேற்று நீரினும் தோற்று கின்ற பிம்பங்கள் 
ஏற்ற வானக் கதிர தன்றி வேற்றுப் பொருள தாகுமோ?
பொற்கு டத்தினும் மட்கு டத்தினும் உள்ள தாகும் வெளியிடம் 
உற்றவி  ரண்டின் புறத்தி லன்றி அகத்தில் வேறு வேறுமோ?


4.
அகமதிற் கலக்க மின்றி ஆனந்த அறிவின் ஒளிதான்
மிகப்படு மாயி னாங்கே புறத்தினிற் காணு கின்ற
இகழ்ச்சியு மதனின் வேறாய் மிகைப்படு முயர்வு முண்டோ?
இகத்தினிற் காணு கின்ற பொருளெலா மொன்றே யன்றோ?
  

No comments:

Post a Comment